Friday 17 January 2014

அஜீத்தின் 'வீரம்' பார்த்தேன், மீண்டும் பார்க்கப் போகிறேனே: சிம்பு


சென்னை: வீரம் படத்தை பார்த்த சிம்பு அஜீத்தை பாராட்டியுள்ளார். மேலும் வீரம் படத்தை மீண்டும் பார்க்கப் போவதாக தெரிவித்துள்ளார். நடிகர் சிம்பு அஜீத் குமாரின் தீவிர ரசிகர். அஜீத்தின் படங்களை முதல்நாள் முதல் ஷோவே பார்த்துவிடுவார். ஆரம்பம் ரிலீஸான அன்று காலை காட்சியை சென்னையில் உள்ள காசி தியேட்டரில் பார்த்தார். ஆனால் வீரம் ரிலீஸான அன்று சிம்பு வெளிநாட்டில் இருந்ததால் படத்தை உடனே பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் அவர் இது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது, சாரி, ஊரில் இல்லை. மேலும் பிசியாக வேறு இருந்தேன். தற்போது வீரம் படம் பார்த்தேன். தலயை மிகவும் பிடித்திருந்தது. பண்டிகை காலத்திற்கு ஏற்ற படம். மீண்டும் இந்த படத்தை பார்க்கப் போகிறேன். இயக்குனர் சிவா தல-இன் மாஸை புரிந்து கொண்டு படத்தில் சரியான அளவு சென்டிமென்ட், ஆக்ஷன் வைத்துள்ளார்...மாஸ்ஸ்ஸ் என்று தெரிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/simbu-do-it-again-ajith-191545.html

0 comments:

Post a Comment

Thank You For Your Comment