கோடம்பாக்கத்தில் அனைவரும் கிசு கிசுத்துக் கொண்டிருப்பது தல55 பற்றி தான். தினம் தினம் இப்படத்தின் செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. தற்போது படம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன . பொதுவா கவுதம் மேனன் படம் என்றால் அதில் ஒளிப்பதிவாளருக்கு அதிக வேலை இருக்கும். இது அவருடை முதல் படத்திலிருந்து தற்போது வெளிவந்த அவரது கடைசி படம் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அஜித் - கவுதம் மேனன் இணையும் புதிய படத்திற்கு இன்னும் ஒளிப்பதிவாளரை நியமிக்கவில்லையாம். இந்த விஷயத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறாராம். கவுதமின் சாய்ஸ் இரண்டு பேரின் மீது இருக்கிறது. அதாவது தற்போது சிம்புவை வைத்து கவுதம் மேனன் இயக்கிக் கொண்டிருக்கும் புதிய படத்தை ஒளிப்பதிவு செய்துக் கொண்டிருக்கும் டேன் மேக்ஆர்தூர் மற்றும் எஸ்.ஆர்.கதிர் இவர் கற்றது தமிழ் மற்றும் சுப்ரமணியபுரம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர்களில் இருவரில் யாரை தேர்வு செய்வதில் என்பதில் தான் இவ்வளவு குழப்பம்.
இப்படத்தில் அஜித்திற்கு இரண்டு வில்லன்களாம். அஜித்திற்கு இணையான வில்லன்கள் என்பதால் அதை பெரிய மாஸ் மற்றும் இதுவரை தல ரசிகர்கள் இப்படி ஒரு அஜித் படத்தை பார்த்திருக்க கூடாது என்பதில் குறிக்கோளாக இருக்கிறாராம். அது ஒளிப்பதிவால் மட்டுமே முடியும் என்பதால் தான் இந்த தாமதம்
0 comments:
Post a Comment
Thank You For Your Comment