அஜித் மற்றும் கௌதம் மேனன் இணையும் புதிய படத்தை விரைவில் தொடங்கவிருக்கிறார்கள். படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் இவ்வேலையில் அஜித்துக்கான இரண்டு ஜோடிகளை தேர்வு செய்துவிட்டார் கௌதம் மேனன். இப்படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடிகளாம் இதுவரை அஜித்துடன் நடிக்காத ஆனால் பிரபலாமான நடிகைகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தாராம் கௌதம். ஆனால் அஜித்துக்கு நான் நீ என்று ஏற்கனவே அவருடன் ஜோடி போட்ட த்ரிஷா, நயன்தாரா போட்டி போட்டுக்கொண்டு வர இதில் த்ரிஷாவை மட்டும் இரண்டாவது நாயகியாக தற்காலிகமாக தேர்வு செய்திருந்தார் கௌதம் மேனன். இதற்கு காரணமும் இருக்கிறது இதற்கு முன் கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா நடித்து அப்படம் பெரிய ஹிட் ஆனதால் தான் இந்த வெயிட்டிங் லிஸ்ட்டாம்.
அடுத்து அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அஜித் சார் படம்தானே எப்படியாவது நான் என்னுடைய கால்ஷீட்டை தந்துவிடுகிறேன் என்று வாக்குறுதியும் அளித்துள்ளாராம் இவர். இருந்தாலும் கௌதம் மேனன் மனதில் எதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே தான் இருந்ததாம் அது த்ரிஷா தான். இதற்கு முன் அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடித்த இரண்டு படங்களுமே சரியாக ஓடாததால் தான் இந்த யோசனையாம். அதனால் மும்பை பக்கம் சென்று வருகிறேன் என்றவரிடம் அஜித் தரப்பில் நீங்க எதற்கு மும்பை வரைக்கும்போகணும் அதான் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் இருக்கிறாரே அவரையே புக் செய்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி எப்படியாவது கால்ஷீட் வாங்கிட வேண்டும் என்று இருக்கிறார் கௌதம் மேனன்.
0 comments:
Post a Comment
Thank You For Your Comment