Sunday 30 March 2014

அஜீத்துடன் டூயட் பாடப் போகும் அனுஷ்கா, ஏமி ஜாக்சன்

அஜித் மற்றும் கௌதம் மேனன் இணையும் புதிய படத்தை விரைவில் தொடங்கவிருக்கிறார்கள். படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் இவ்வேலையில் அஜித்துக்கான இரண்டு ஜோடிகளை தேர்வு செய்துவிட்டார் கௌதம் மேனன். இப்படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடிகளாம் இதுவரை அஜித்துடன் நடிக்காத ஆனால் பிரபலாமான நடிகைகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தாராம் கௌதம். ஆனால் அஜித்துக்கு நான் நீ என்று ஏற்கனவே அவருடன் ஜோடி போட்ட த்ரிஷா, நயன்தாரா போட்டி போட்டுக்கொண்டு வர இதில் த்ரிஷாவை மட்டும் இரண்டாவது நாயகியாக தற்காலிகமாக தேர்வு செய்திருந்தார் கௌதம் மேனன். இதற்கு காரணமும் இருக்கிறது இதற்கு முன் கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா நடித்து அப்படம் பெரிய ஹிட் ஆனதால் தான் இந்த வெயிட்டிங் லிஸ்ட்டாம்.

அடுத்து அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அஜித் சார் படம்தானே எப்படியாவது நான் என்னுடைய கால்ஷீட்டை தந்துவிடுகிறேன் என்று வாக்குறுதியும் அளித்துள்ளாராம் இவர். இருந்தாலும் கௌதம் மேனன் மனதில் எதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே தான் இருந்ததாம் அது த்ரிஷா தான். இதற்கு முன் அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடித்த இரண்டு படங்களுமே சரியாக ஓடாததால் தான் இந்த யோசனையாம். அதனால் மும்பை பக்கம் சென்று வருகிறேன் என்றவரிடம் அஜித் தரப்பில் நீங்க எதற்கு மும்பை வரைக்கும்போகணும் அதான் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் இருக்கிறாரே அவரையே புக் செய்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி எப்படியாவது கால்ஷீட் வாங்கிட வேண்டும் என்று இருக்கிறார் கௌதம் மேனன்.


Thursday 27 March 2014

அஜித் - கவுதம் மேனன் இணையும் படத்தின் முக்கிய கேரக்டரில் கராத்தே ஹூசைனி

தமிழகத்தில் கராத்தே கலை பிரபலமாவதற்கு கராத்தே ஹூசைனியும் ஒரு காரணம். எப்படியென்றால், அவரிடம் அந்த கலையை கற்ற சிஷ்யர்கள்தான் தமிழகமெங்கும் கராத்தே மையங்கள் நிறுவி இளசுகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.
                                                                                                                                                  அதோடு சில ஆண்டுகளுக்கு முன்பு சில படங்களில் ஹூசைனி நடித்து வந்ததால், பெரிய அளவில் அவர் பிரபலமடைந்தார்.

இருப்பினும், அவரை முழுநேர வில்லனாக்க சில டைரக்டர்கள் திட்டமிட்டதால் தன் பெயரளவில் நெகடீவ் இமேஜ் உருவாக்க விரும்பாத கராத்தே ஹூசைனி அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து கராத்தே பயிற்சி கொடுப்பதில் முழு நேரத்தையும செலவிட்டார்.

இந்த நிலையில, தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். முதலில் தன்னை வில்லனை தவிர வேறு எந்த வேடத்துக்கும் அழைக்க மாட்டார்கள் என்று நினைத்த ஹூசைனி, வில்லன் வேடத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என்றாராம்.

அதையடுத்து, அவரது ரோல் பற்றி கெளதம்மேனன் சொன்னதும், கண்டிப்பாக நடிக்கிறேன் என்று டபுள் ஓ.கே சொல்லி விட்டாராம் ஹூசைனி.
                                                                                                                                                          ஆக, இந்த படத்தில் கராத்தே ஹூசைனியை விரும்பி நடிக்க வைத்திருப்பதால், இதில் அஜீத் கராத்தேயை மையப்படுத்தும் சண்டை காட்சியிலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.                                                                           

அஜித் - கவுதம் மேனன் இணையும் படத்தின் புதிய செய்தி

கோடம்பாக்கத்தில் அனைவரும் கிசு கிசுத்துக் கொண்டிருப்பது தல55 பற்றி தான்.                                                                                                                                                                                                                                                                      தினம் தினம் இப்படத்தின் செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. தற்போது படம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன  .                                                                                                                                                                                                                                                                       பொதுவா கவுதம் மேனன் படம் என்றால் அதில் ஒளிப்பதிவாளருக்கு அதிக வேலை இருக்கும். இது அவருடை முதல் படத்திலிருந்து தற்போது வெளிவந்த அவரது கடைசி படம் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அஜித் - கவுதம் மேனன் இணையும் புதிய படத்திற்கு இன்னும் ஒளிப்பதிவாளரை நியமிக்கவில்லையாம்.                                                                                                                                                                                                                                                                                                    இந்த விஷயத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறாராம். கவுதமின் சாய்ஸ் இரண்டு பேரின் மீது இருக்கிறது. அதாவது தற்போது சிம்புவை வைத்து கவுதம் மேனன் இயக்கிக் கொண்டிருக்கும் புதிய படத்தை ஒளிப்பதிவு செய்துக் கொண்டிருக்கும் டேன் மேக்ஆர்தூர் மற்றும் எஸ்.ஆர்.கதிர் இவர் கற்றது தமிழ் மற்றும் சுப்ரமணியபுரம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர்களில் இருவரில் யாரை தேர்வு செய்வதில் என்பதில் தான் இவ்வளவு குழப்பம்.
                                                                                                                                                                                                                   இப்படத்தில் அஜித்திற்கு இரண்டு வில்லன்களாம். அஜித்திற்கு இணையான வில்லன்கள் என்பதால் அதை பெரிய மாஸ் மற்றும் இதுவரை தல ரசிகர்கள் இப்படி ஒரு அஜித் படத்தை பார்த்திருக்க கூடாது என்பதில் குறிக்கோளாக இருக்கிறாராம். அது ஒளிப்பதிவால் மட்டுமே முடியும் என்பதால் தான் இந்த தாமதம்                                                                                                                                                        

Monday 17 March 2014

அஜீத் படம் மூலம் மீண்டும் இணையும் கவுதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ்

அஜீத் படம் மூலம் மீண்டும் இணையும் கவுதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ்          அஜீத் நடிக்கும் புதிய படத்தில் கவுதம் மேனனுடன் மீண்டும் இணைகிறார் ஹாரிஸ் ஜெயரராஜ்.                                                                                                                                                                                                                                                                        ஆரம்பம் படத்துக்குப் பிறகு ஏ எம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். இந்தப் படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
                                                                                                                                                       இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார்.                                                                                                                                                                                                                                                                          கவுதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலேயிலிருந்து வாரணம் ஆயிரம் வரை இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்.                                                                                                                                                                                                        ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். ஏ ஆர் ரஹ்மான், இளையராஜா ஆகியோருடனும் பணியாற்றினார் கவுதம் மேனன்.                                                                                                                                                       இப்போது அஜீத் படத்துக்காக மீண்டும் ஹாரீஸ் ஜெயராஜுடன் கை கோர்த்துள்ளார்.                                                                                                                                                                                                                                                                                         அஜீத் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பது இதுவே முதல் முறை

   source: tamil.oneindia      

இரட்டை வேடங்களில் அஜித்?

கௌதம் மேனன் இயக்கும் அஜித் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகிறது. அஜித் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். இதற்காக எட்டு கிலோ எடையைக் குறைத்து கொஞ்சம் ஸ்லிம் ஆகி இருக்கிறார்.
சிக்ஸ் பேக் போல எய்ட் பேக்கில் அசத்தப் போகிறார் அஜித். ஏற்கனவே 'ஆஞ்சநேயா', 'கிரீடம்' படங்களில் அஜித் போலீஸாக நடித்திருக்கிறார்.
ஆனால், அந்தப் படங்களில் இல்லாத ஸ்டைல், லுக், கம்பீரம் கௌதம் மேனன் படத்தில் இருக்குமாம்.
அஜித் இதில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கப் போகிறாராம். 'வாலி', 'வில்லன்', 'அட்டகாசம்', 'அசல்' போன்ற படங்களில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக படத்தை முடிக்க வேண்டும் என்று கௌதம் மேனன்  தீவிரமாக இயங்க ஆரம்பித்துவிட்டார்.                                                                
                                                                                                                                                                                                                                                                                        source:   cinema.vikatan                        

Saturday 15 March 2014

அஜித்தை இயக்கப் போகும் ஏ.ஆர்.முருகதாஸ்?

'தீனா' படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இயக்குநர் அடையாளம் கொடுத்தவர் அஜித். இப்போது அஜித்தின் அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கைகோர்க்கப்போகிறாராம்.
முருகதாஸ் தற்போது விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும், 'துப்பாக்கி'யின் இந்தி ரீமேக்கான 'ஹாலிடே' படத்தை ரிலீஸ் செய்வதிலும் மும்மரமாக இருக்கிறார்.
இதே நேரத்தில் முருகதாஸ் தெலுங்குப் படம் இயக்கப்போவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது அடுத்தபடம் அஜித்துடன் தான் என தெளிவாகக் கூறிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.
படத்தின் பெயர் 'தல' எனக் கூறப்படுகிறது. அஜித்திற்கு 'தீனா' படத்தில் தல என்ற பட்டப்பெயர் வைத்தது ஏ.ஆர்.முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித் அதனை முடித்துவிட்டு 'தல' படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.                                                                                                                                                                                                                                                         source:   cinema.vikatan                            

Friday 14 March 2014

அஜீத்தா, விஜய்யான்னா அஜீத் தான்: ஜனனி அய்யர்

அஜீத் அல்லது விஜய் படத்தில் நடிக்க கேட்டால் தான் நிச்சயம் அஜீத்துடன் தான் நடிப்பேன் என்று ஜனனி அய்யர் தெரிவித்துள்ளார்.                                                                                                                                                                                                     அவன் இவன், பாகன், தெகிடிஆகிய படங்களில் நடித்த ஜனனி அய்யர் தற்போது மலையாளத்தில் பிசியான நடிகை.                                                                                                                                                                                                                               அவர் கையில் 4 மலையாள படங்கள் உள்ளன. வாய்ப்பு வருவதால் அங்கு நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனனிக்கு கோலிவுட்டில் உலக நாயகன் கமல் ஹாஸன் தான் மிகவும் பிடிக்குமாம். அவரை அடுத்து ஜனனிக்கு அஜீத் குமாரை தான் பிடிக்குமாம்.
                                                                                                                                                                     அஜீத், விஜய்                                                                                                                                                                                                                                                                                               அஜீத் மற்றும் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிப்பீர்கள் என்று ஜனனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், அவர்கள் இருவருடன் நடிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்காது. 2 பேருடனும் நடிக்க விரும்புகிறேன். ஆனால் நான் அஜீத் ரசிகை என்பதால் அவருடன் நடிக்கும் வாய்ப்பையே ஏற்றுக் கொள்வேன் என்றார்.

Saturday 8 March 2014

அஜீத்- கவுதம் மேனன் படத்தின் வசனகர்த்தா!

பாலிவுட்டில் சில இந்திப் படங்கள் இயக்கியுள்ள ஸ்ரீதர் ராகவன்தான் அஜீத்தின் அடுத்த படத்துக்கு வசனம் எழுதப் போகிறார்.                                                                                                                                                                                                                                  தம் மரோ தம்ஸ காக்கி போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர் ஸ்ரீதர் ராகவன். சென்னைக்காரர்தான். இந்தியில் சமீபத்தில் வந்த ஏஜென்ட் வினோத் உள்பட சில படங்களையும் இயக்கியுள்ளார்.                                                                                                                                                                                                                                 அஜீத் - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் வசனகர்த்தாவாக ஸ்ரீதரைத்தான் நியமித்துள்ளனர்.                                                                                                                                                                                                               இதனை உறுதி செய்த ஸ்ரீதர் ராகவன், "கவுதம் மேனன் இயக்கும் அஜீத் படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதுப் பணி மிக சுவாரஸ்யமாக உள்ளது. மிக அற்புதமான கூட்டணியில் இணைந்திருக்கிறேன்," என்று ட்விட் செய்துள்ளார்.                                                                                                                                                          இந்தப் படம் ஒரு போலீஸ் கதை. ஏற்கெனவே இதுமாதிரி படங்களுக்கு எழுதிய அனுபவம் உள்ளவர் என்பதாலேயே ஸ்ரீதர் ராகவனை அழைத்தாராம் கவுதம் மேனன்.

  source:oneindia

Wednesday 5 March 2014

சிவா இயக்கத்தில் ரொமண்டிக ஹீரோ களமிறங்கிறார் அஜித்

அஜீத்- சிறுத்தை சிவா கூட்டணியில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியான 'வீரம்' படம் 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை அடுத்து அஜீத் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் அஜீத்தை நேரில் சந்தித்து வீரம் பட வெற்றிக்கான வாழ்த்துக்களை பரிமாறிகொண்டபோது, தனது அடுத்த படத்தின் திரைக்கதையை அஜீத்திடம் காண்பித்திருக்கிறார் சிறுத்தை சிவா. ஆக்ஷன் காட்சிகள் சிறிதும் இல்லாமல் ஜாலியான ஒரு ரொமண்டிக ஹீரோ பாத்திரம் அஜீத்தை மிகவும் கவர்ந்தது. எனவே இந்த படத்தில் நானே நடிக்கிறேன் என்று அஜீத் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

கதைப்படி ஹீரோ ரொமாண்டிக் வாலிபர் என்பதால் அஜீத்தின் எடையை குறைக்க வேண்டும், ஏற்கனவே கவுதம் மேனன் படத்திற்காக குறைத்த எடையை மெயிண்டன் செய்தாலே போதும் என்றும் சிறுத்தை சிவா கேட்டுக்கொண்டார். அஜீத்தும் சம்மதம் தெரிவித்துவிட்டார்                                                                                                                                                                                                                                                      (இந்த படத்தை  பூஜை வரும் டிச.10ம் தேதி  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது ?)                                                                                                                                                                                                 

Monday 3 March 2014

போலீஸ் அதிகாரியாக களமிறங்கிறார் அஜித்

அஜித் - கெளதம் மேனன் இணையும் படத்திற்கான ஆரம்பகட்ட வேலை கள் நடந்துவரும் நிலையில் அப்படத் தைப் பற்றி சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
                                                                                      இப்படத்தில் முதன் முறையாக முழுநீள போலீஸ் அதிகாரியாக களமிறங்கிறார் அஜித்.    போலீஸ் அதிகாரி வேடம் என்பதால், உடம்பை மிகவும் குறைத்து 6 பேக்ஸ் வைக்க திட்டமிட்டுள்ளாராம் அஜித். யம்மாடி அதற்காக ஜிம்மிலேயே தவம் கிடக்கிறார்.                                                                                                           அதோடு சால்ட் & பெப்பர் லுக்கில் இருந்து முற்றிலும் இளமையாக நடிக்க இருக்கிறாராம்.
 .                                                                                     கெளதம் மேனன் படத்தில் இருந்து சூர்யா விலகியதைத் தொடர்ந்து, கெளதம் மேனனை அழைத்துள்ளார் அஜித். “இந்த முறை நம்ம கூட்டணி மிஸ்ஸாக கூடாது. நாம பண்றோம், ஏ.எம்.ரத்னம் தான் தயாரிப்பாளர்” என்று கூற சந்தோஷத்தில் திளைத்தார் கெளதம் மேனன்.
முதலில் அஜித்தை சந்திக்கும் போது கூறிய, அதே போலீஸ் அதிகாரி கதையை கையில் எடுத்திருக்கிறார் கெளதம் மேனன். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசி வருகிறார். 5 மாதங்களில் முழுப் படப்பிடிப்பையும் முடித்து, தீபாவளிக்கு வெளியிட திட்ட மிட்டு இருக்கிறார்கள்.
மார்ச் 15ம் தேதிக்கு பிறகு படப்பிடிப்பைத் தொடங்கவுள்ள நிலையில் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.