Thursday 11 December 2014
Thursday 4 December 2014
‘ஐ’,‘கத்தி’ சாதனையை முறியடித்த ‘என்னை அறிந்தால்’
நேற்று இரவு அஜித் ரசிகர்களுக்கு சிவராத்திரி. விடிய விடிய காத்திருந்து ‘என்னை அறிந்தால்’ டீஸரை கண்டுகளித்திருக்கிறார்கள். இந்த டீஸர் குறித்த #YennaiArindhaalTeaserStormOnDec4 என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கிய ‘ட்வீட்’ இப்போது வரை 2.5 லட்சத்தை எட்டியிருக்கிறது. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை எந்த ஒரு படத்திற்கும் இவ்வளவு ‘ட்வீட்’கள் இதுவரை செய்யப்படவில்லை.
இது ஒரு சாதனையென்றால், நேற்று 12 மணிக்கு வெளியான ‘என்னை அறிந்தால்’ டீஸர் இப்போது 12 மணிக்குள் 5 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டியிருக்கிறது. தென்னிந்திய சினிமா வரலாற்றில் ‘ஐ’ படம்தான் முதல் 12 மணிநேரத்தில் 8 லட்சம் பார்வையாளர்களைத் தொட்டது. அதன்பிறகு ‘என்னை அறிந்தால்’ பட டீஸருக்குதான் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
அதோடு 12 மணி நேரத்தில் இந்த டீஸருக்கு 25 ஆயிரம் ‘லைக்’குகள் கிடைத்திருக்கின்றன. இதுவரை எந்த தென்னிந்திய படத்தின் டீஸரும் 12 மணி நேரத்தில் இவ்வளவு ‘லைக்’குகளை குவிக்கவில்லை (வரும் நாட்களில் இது இன்னும் அதிகமாகும்). 88 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்த ‘ஐ’ படத்தின் டீஸருக்கே இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள்தான் கிடைத்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான ‘கத்தி’ படத்தின் டீஸருக்கு 1 நாளில் 20 ஆயிரம் ‘லைக்’குகள் கிடைத்தன. இதுவே முந்தைய அதிகபட்ச சாதனையாக இருந்தது. இப்போது அதை ‘என்னை அறிந்தால்’ முறியடித்திருக்கிறது.
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த டீஸருக்கு பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இது ஒரு சாதனையென்றால், நேற்று 12 மணிக்கு வெளியான ‘என்னை அறிந்தால்’ டீஸர் இப்போது 12 மணிக்குள் 5 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டியிருக்கிறது. தென்னிந்திய சினிமா வரலாற்றில் ‘ஐ’ படம்தான் முதல் 12 மணிநேரத்தில் 8 லட்சம் பார்வையாளர்களைத் தொட்டது. அதன்பிறகு ‘என்னை அறிந்தால்’ பட டீஸருக்குதான் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
அதோடு 12 மணி நேரத்தில் இந்த டீஸருக்கு 25 ஆயிரம் ‘லைக்’குகள் கிடைத்திருக்கின்றன. இதுவரை எந்த தென்னிந்திய படத்தின் டீஸரும் 12 மணி நேரத்தில் இவ்வளவு ‘லைக்’குகளை குவிக்கவில்லை (வரும் நாட்களில் இது இன்னும் அதிகமாகும்). 88 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்த ‘ஐ’ படத்தின் டீஸருக்கே இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள்தான் கிடைத்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான ‘கத்தி’ படத்தின் டீஸருக்கு 1 நாளில் 20 ஆயிரம் ‘லைக்’குகள் கிடைத்தன. இதுவே முந்தைய அதிகபட்ச சாதனையாக இருந்தது. இப்போது அதை ‘என்னை அறிந்தால்’ முறியடித்திருக்கிறது.
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த டீஸருக்கு பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
Tuesday 29 April 2014
அஜீத் பிறந்த நாள்.... கொண்டாட்டம்!
1.அமர்க்களம்
அன்றைக்கு அஜித் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அஜித்தின் 25வது படமான அமர்க்களம் படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் வெளியிடுகின்றனர். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறதாம்.
2.ஆரம்பம்
டி வி சேனல்கள் மட்டும் சும்மா இருக்குமா... அஜீத் பிறந்த நாள் ஸ்பெஷலாக ஜெயா டிவி ஆரம்பம் படத்தை ஒளிபரப்புகிறது. கடந்த தீபாவளிக்கு வந்த படம் இது. அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடித்திருந்தனர்.
3.வீரம்
ஜெயாவுக்குப் போட்டியாக ஆரம்பத்தை விட புதிய படமான வீரம் படத்தைத் திரையிடவிருக்கிறது சன் டிவி. இந்தப் படத்தில் தமன்னா அஜீத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த பொங்கலுக்கு வெளியான படம் இது.
4.புதுப்பட போஸ்டர்(thala55)
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி மே 1ந் தேதி கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிடவிருக்கிறார்களாம்.
5.HAPPY BIRTHDAY THALA
MAY-1ST VIJAY TV SPECIAL PROGRAM 10AM.
6.Varalaaru (Raj)
7.Billa(Kalaignar)
Thursday 24 April 2014
மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று வாக்களித்த அஜீத்
நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. மற்றபடி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. மற்றபடி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.
பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் காலையிலேயே வாக்களித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாக்குப்பதிவு துவங்கியவுடன் வாக்களித்தார்.
இந்நிலையில் அஜீத் குமார் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு சென்றனர்.
Tuesday 22 April 2014
கௌதம் மேனன் +அஜித் +விவேக் +ஹாரிஸ் ஜெயராஜ்
அஜித்-கௌதம் மேனன் இணைந்துள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு, கௌதமின் வழக்கமான பாணியில் நடக்காமல் வேகமாக நடந்துவருகிறது. ஒருபுறம் ஷூட்டிங்கையும் நடத்திக்கொண்டு, மறுபுறம் படத்திற்கு தேவையான நடிகர்களையும் செலக்ட் செய்துகொண்டிருக்கும் கௌதம் மேனன், சமீபத்தில் தன் படக்குழுவில் நடிகர் விவேக்கையும் சேர்த்திருக்கிறார்.
விவேக் ஹீரோவாக நடித்திருக்கும் ’நான் தான் பாலா’ திரைப்படத்தை சமீபத்தில் கௌதம் மேனனுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார் விவேக். படத்தை முழுவதுமாக பார்த்த கௌதம் மேனன் ‘உங்களை இதுவரையிலும் ஒரு காமெடியனாக தான் எனக்குத் தெரியும். ஆனால் படம் பார்க்கும்போது காமெடியன் என்பதை முழுவதுமாக மறந்துவிட்டேன்” என்று கூறி சிலாகித்திருக்கிறார். மேலும் கௌதம் அஜித்துடன் இணைந்திருக்கும் திரைப்படத்தில் உள்ள காமெடியுடன் கலந்த எமோஷனல் கேரக்டரில் நடிக்கவேண்டும் என்றும் விவேக்கிடம் கேட்டிருக்கிறாராம்.
கௌதம் மேனனும் விவேக்கும் மின்னலே திரைப்படத்திற்குப் பிறகு எந்த திரைப்படத்திலும் இணையவில்லை. அதேமாதிரி அஜித்துடன் விவேக் கிரீடம் படத்தில் இணைந்து நடித்திருந்தார். கௌதம் மேனன் - அஜித் - ஹாரிஸ் ஜெயராஜ் - விவேக் என இந்த கூட்டணி பட்டையை கிளப்புவதாக பேசிக்கொள்கின்றனர் திரையுலகினர்.
http://nakkheeran.in/
Labels:
#thala,
#thala55,
2014 tamil movie,
A.M.Ratnam,
ajith,
thala,
விவேக்
Saturday 12 April 2014
அஜித் - கௌதம் மேனன் படத்தின் தலைப்பு ஆயிரம் தோட்டாக்களா?
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிரார் அஜித். இப்படத்தின் படப்பிடிப்பு டமீபத்தில் தொடங்கியது.
இப்படத்திற்கு 'ஆயிரம் தோட்டாக்கள்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாம். EM&C நிறுவனம் இப்பட பெயர் டிசைனை வடிவமைக்கிறது. அஜித்தின் பிறந்தநாளான மே1ம் தேதி இந்தப் பெயரை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின் ஆரம்ப கட்டத்திலேயே அஜித்தும் அஜித்தும் மோதும் சண்டைக்காட்சியைப் படமாக்கினார்கள்.
கெளதம் மேனனும் சிம்புவும் இணைந்திருக்கும் படத்தின் ஒளிப்பதிவாளர் டேன் மேகர்தர் தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் தாமரை இப்படத்தின் வசனங்களை எழுதுவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், டைட்டில் குறித்தும், வசனம் குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
இப்படத்திற்கு 'ஆயிரம் தோட்டாக்கள்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாம். EM&C நிறுவனம் இப்பட பெயர் டிசைனை வடிவமைக்கிறது. அஜித்தின் பிறந்தநாளான மே1ம் தேதி இந்தப் பெயரை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின் ஆரம்ப கட்டத்திலேயே அஜித்தும் அஜித்தும் மோதும் சண்டைக்காட்சியைப் படமாக்கினார்கள்.
கெளதம் மேனனும் சிம்புவும் இணைந்திருக்கும் படத்தின் ஒளிப்பதிவாளர் டேன் மேகர்தர் தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் தாமரை இப்படத்தின் வசனங்களை எழுதுவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், டைட்டில் குறித்தும், வசனம் குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
Friday 11 April 2014
அஜீத் பிளாஷ்பேக் ஸ்டோரி
மே 1ம் தேதி அஜீத்துக்கு பிறந்த நாள். தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று அதிகார பூர்வமாக அவர் அறிவித்த பிறகும் கூட, அவருக்கான ரசிகர் மன்றங்களும், நற்பணி மன்றங்களும் இயங்கி வருகின்றன. இதுவரை அஜீத் 54 படங்களில் நடித்துள்ளார். அதைப்பற்றிய தொகுப்பு இது.
தமிழில் செல்வா இயக்கிய ‘அமராவதி’ மூலம் ஹீரோவாக அறிமுகமான அஜீத், பிறகு தெலுங்கு, இந்தியில் சேர்த்து 54 படங்களில் நடித்துள்ளார். விரைவில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 55வது படம். அஜீத்தை 2 படங்களில் இயக்கியவர்கள் கே.சுபாஷ், அகத்தியன், ராஜ்கபூர், எஸ்.எழில், கே.எஸ்.ரவிக்குமார், விஷ்ணுவர்தன். ‘பவித்ரா’, ‘நேசம்’ படங்களை கே.சுபாஷ் இயக்கினார். ‘வான்மதி’, ‘காதல் கோட்டை’ படங்களை அகத்தியன் இயக்கினார்.
‘அவள் வருவாளா’, ‘ஆனந்த பூங்காற்றே’ படங்களை ராஜ்கபூர் இயக்கினார். ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’ படங்களை எஸ்.எழில் இயக்கினார். ‘வில்லன்’, ‘வரலாறு’ படங்களை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். ‘பில்லா’ ரீமேக், ‘ஆரம்பம்’ படங்களை விஷ்ணுவர்தன் இயக்கினார்.
அஜீத்தை ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல்’ என 4 படங்களில் சரண் இயக்கினார்.
அஜீத்தை ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல்’ என 4 படங்களில் சரண் இயக்கினார்.
ஒரு படத்தில் மட்டும் அஜீத்தை இயக்கியவர்கள் லிஸ்ட் கொஞ்சம் நீள்கிறது. ‘பிரேம புஸ்தகம்’ கொல்லப்புடி சீனிவாஸ், ‘பாசமலர்கள்’ சுரேஷ் மேனன், ‘ராஜாவின் பார்வையிலே’ ஜானகி சவுந்தர், ‘ஆசை’ வசந்த், ‘கல்லூரி வாசல்’ பவித்ரன், ‘மைனர் மாப்பிள்ளை’ வி.சி.குகநாதன், ‘ராசி’ முரளி அப்பாஸ், ‘உல்லாசம்’ ஜேடிஜெர்ரி, ‘பகைவன்’ ரமேஷ் கிருஷ்ணன், ‘ரெட்டை ஜடை வயசு’ சி.சிவகுமார், ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ விக்ரமன், ‘உயிரோடு உயிராக’ சுஷ்மா அகுஜா, ‘தொடரும்’ ரமேஷ்கண்ணா,
‘உன்னைத் தேடி’ சுந்தர்.சி, ‘வாலி’ எஸ்.ஜே.சூர்யா, ‘நீ வருவாய் என…’ ராஜகுமாரன், ‘முகவரி’ வி.இசட்.துரை, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ராஜீவ் மேனன், ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ கவிகாளிதாஸ், ‘தீனா’ ஏ.ஆர்.முருகதாஸ், ‘சிட்டிசன்’ சரவணசுப்பையா, ‘அசோகா’ சந்தோஷ் சிவன், ‘ரெட்’ சிங்கம் புலி, ‘என்னை தாலாட்ட வருவாளா’ கே.எஸ்.ரவீந்திரன், ‘ஆஞ்சநேயா’ என்.மகாராஜன், ‘ஜனா’ ஷாஜிகைலாஷ், ‘ஜி’ லிங்குசாமி, ‘பரமசிவன்’ பி.வாசு, ‘திருப்பதி’ பேரரசு, ‘ஆழ்வார்’ செல்லா, ‘கிரீடம்’ ஏ.எல்.விஜய், ‘ஏகன்’ ராஜுசுந்தரம், ‘மங்காத்தா’ வெங்கட் பிரபு, ‘பில்லா 2’ சக்ரி டோலட்டி, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ கவுரி ஷிண்டே, ‘வீரம்’ சிறுத்தை சிவா என, 36 பேர் இயக்கி இருக்கிறார்கள்.
தமிழைத் தவிர தெலுங்கில் ‘பிரேம புஸ்தகம்’, இந்தியில் ‘அசோகா’, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படங்களில் மட்டும் அஜீத் நடித்துள்ளார். விஜய்யுடன் ‘ராஜாவின் பார்வையிலே’, பிரசாந்த்துடன் ‘கல்லூரி வாசல்’, விக்ரமுடன் ‘உல்லாசம்’, சத்யராஜுடன் ‘பகைவன்’, கார்த்திக்குடன் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’,
‘ஆனந்த பூங்காற்றே’, பார்த்திபனுடன் ‘நீ வருவாய் என…’, சுரேஷ் கோபியுடன் ‘தீனா’, அப்பாசுடன் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ஆர்யாவுடன் ‘ஆரம்பம்’ என, மற்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து அஜீத் நடித்துள்ளார்.
‘அமராவதி’ படத்தில் அஜீத்துக்கு விக்ரம் டப்பிங் பேசியுள்ளார்.
‘அமராவதி’ படத்தில் அஜீத்துக்கு விக்ரம் டப்பிங் பேசியுள்ளார்.
‘அமர்க்களம்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த (பேபி) ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜீத்துக்கு அனொஷ்கா என்ற மகள் இருக்கிறாள். ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டத்தை டைட்டிலில் தன் பெயருக்கு முன்னால் போடக் கூடாது என்று கண்டிப்புடன் சொன்ன அஜீத், ‘அசல்’ படத்தின் திரைக்கதை, வசன பணியில் இயக்குனர் சரணுக்கு உதவி செய்தார். அதை மட்டும் டைட்டிலில் போட அனுமதித்தார். கார் ரேஸ் வீரரான அஜீத், கார் பந்தய வீரர் கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறார். தவிர, சொந்தப் படம் தயாரிப்பதற்காக ‘ஏ.கே இன்டர்நேஷனல்’ என்ற கம்பெனியை தொடங்கியுள்ளார்.
Thursday 10 April 2014
Thala55 படத்தில் ஹாலிவுட் இயக்குநர்
ஒரு வழியாக நேற்று அஜித் நடிக்கும் புதிய படத்தினை அதிகாரப்பூர்வமாக பூஜை போட்டு ஆரம்பித்துவிட்டார்கள்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் இந்த பூஜை நடைபெற்றது. நாளை முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
இச்சமயத்தில் படம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இப்படத்தை ஒளிப்பதிவு செய்யப்போவது பிரபல ஆஸ்திரேலிய இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான Dan Macarthur என்பவராம். இவர் தமிழில் 7up விளம்பரத்திற்கு ஏற்கனவே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
விளம்பரமும் ஒளிப்பதிவில் பெரிய வரவேற்பை பெற்றது. இவருடைய ஸ்டைலே ஒரு சின்ன விஷயத்தையும் கூட அழகாக மிகபிரம்மாண்டமாக காட்டக் கூடியவராம். இதனால் படமும் பெரிய பிரம்மாண்ட படமாக உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் இந்த பூஜை நடைபெற்றது. நாளை முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
இச்சமயத்தில் படம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இப்படத்தை ஒளிப்பதிவு செய்யப்போவது பிரபல ஆஸ்திரேலிய இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான Dan Macarthur என்பவராம். இவர் தமிழில் 7up விளம்பரத்திற்கு ஏற்கனவே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
விளம்பரமும் ஒளிப்பதிவில் பெரிய வரவேற்பை பெற்றது. இவருடைய ஸ்டைலே ஒரு சின்ன விஷயத்தையும் கூட அழகாக மிகபிரம்மாண்டமாக காட்டக் கூடியவராம். இதனால் படமும் பெரிய பிரம்மாண்ட படமாக உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
Friday 4 April 2014
அஜித்தின் 55-வது படப்பிடிப்பு ஏப்ரல் 9ம் தேதி துவங்குகிறது
‘வீரம்’ படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 55-வது படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் டைரக்ட் செய்கிறார். ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் கூறியிருப்பதாவது வருகிற ஏப்ரல் 9- ஆம் தேதி இந்தப்படம் ஆரம்பமாக உள்ளது. போலீஸ் க்ரைம் த்ரில்லராக உருவாக இருக்கும்
அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி ஆகிய இருவரும் வில்லன்களாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்
அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி ஆகிய இருவரும் வில்லன்களாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்
Wednesday 2 April 2014
தல ஒன்று! வில்லன் இரண்டு!
அஜித் - கெளதம் மேனன் படத்தினைப் பற்றி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செய்தி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. முக்கியமாக இசையமைப்பாளர் மற்றும் வில்லனைப் பற்றிய செய்திகள் இதில் முக்கிய இடத்தினை பிடித்திருக்கின்றன.
அஜித் - கெளதம் மேனன் - அனுஷ்கா இணையும் படத்தினை ஏ.என்.ரத்னம் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார். மேலும் இப்படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்று விசாரித்த போது பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன.
அஜித் - கெளதம் மேனன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், இப்படத்தில் அஜித் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி தவறானது. அஜித்திற்கு இப்படத்தில் இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள்.
வில்லன்கள் விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை அவர்கள் வில்லன்களாக நடித்திருக்கக் கூடாது, ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக அமைய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறது படக்குழு.
படத்தின் வில்லன்களாக அரவிந்த்சாமி மற்றும் அருண்விஜய் இருவரும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இதுவரை நாயகனாக நடித்து வந்தவர்கள், அஜித் படம் மற்றும் கதையில் வில்லன்களின் பங்கு என்ன என்பதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.
சிம்பு - கெளதம் மேனன் இணைந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்த டான் மெக்கார்தர்(Dan Macarthur), அஜித் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். முன்னர் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறார் என்ற பேச்சுகள் நிலவி வந்தன. ஆனால், எஸ்.ஆர்.கதிரிடம் இது குறித்து யாருமே பேசவில்லையாம்.
அஜித் - அனுஷ்கா - அரவிந்த் சாமி - அருண்விஜய் என ஒரு புதிய கூட்டணியுடன் அதிரடியான ஒரு போலீஸ் ஆக்ஷன் கதைக்கு திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் மேனன்.
Labels:
#thala,
2014 tamil movie,
A.M.Ratnam,
ajith,
thala55,
அரவிந்த் சாமி,
அருண்விஜய்,
அனுஷ்கா,
அஜித்
Sunday 30 March 2014
அஜீத்துடன் டூயட் பாடப் போகும் அனுஷ்கா, ஏமி ஜாக்சன்
அஜித் மற்றும் கௌதம் மேனன் இணையும் புதிய படத்தை விரைவில் தொடங்கவிருக்கிறார்கள். படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் இவ்வேலையில் அஜித்துக்கான இரண்டு ஜோடிகளை தேர்வு செய்துவிட்டார் கௌதம் மேனன். இப்படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடிகளாம் இதுவரை அஜித்துடன் நடிக்காத ஆனால் பிரபலாமான நடிகைகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தாராம் கௌதம். ஆனால் அஜித்துக்கு நான் நீ என்று ஏற்கனவே அவருடன் ஜோடி போட்ட த்ரிஷா, நயன்தாரா போட்டி போட்டுக்கொண்டு வர இதில் த்ரிஷாவை மட்டும் இரண்டாவது நாயகியாக தற்காலிகமாக தேர்வு செய்திருந்தார் கௌதம் மேனன். இதற்கு காரணமும் இருக்கிறது இதற்கு முன் கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா நடித்து அப்படம் பெரிய ஹிட் ஆனதால் தான் இந்த வெயிட்டிங் லிஸ்ட்டாம்.
அடுத்து அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அஜித் சார் படம்தானே எப்படியாவது நான் என்னுடைய கால்ஷீட்டை தந்துவிடுகிறேன் என்று வாக்குறுதியும் அளித்துள்ளாராம் இவர். இருந்தாலும் கௌதம் மேனன் மனதில் எதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே தான் இருந்ததாம் அது த்ரிஷா தான். இதற்கு முன் அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடித்த இரண்டு படங்களுமே சரியாக ஓடாததால் தான் இந்த யோசனையாம். அதனால் மும்பை பக்கம் சென்று வருகிறேன் என்றவரிடம் அஜித் தரப்பில் நீங்க எதற்கு மும்பை வரைக்கும்போகணும் அதான் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் இருக்கிறாரே அவரையே புக் செய்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி எப்படியாவது கால்ஷீட் வாங்கிட வேண்டும் என்று இருக்கிறார் கௌதம் மேனன்.
Thursday 27 March 2014
அஜித் - கவுதம் மேனன் இணையும் படத்தின் முக்கிய கேரக்டரில் கராத்தே ஹூசைனி
தமிழகத்தில் கராத்தே கலை பிரபலமாவதற்கு கராத்தே ஹூசைனியும் ஒரு காரணம். எப்படியென்றால், அவரிடம் அந்த கலையை கற்ற சிஷ்யர்கள்தான் தமிழகமெங்கும் கராத்தே மையங்கள் நிறுவி இளசுகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.
அதோடு சில ஆண்டுகளுக்கு முன்பு சில படங்களில் ஹூசைனி நடித்து வந்ததால், பெரிய அளவில் அவர் பிரபலமடைந்தார்.
இருப்பினும், அவரை முழுநேர வில்லனாக்க சில டைரக்டர்கள் திட்டமிட்டதால் தன் பெயரளவில் நெகடீவ் இமேஜ் உருவாக்க விரும்பாத கராத்தே ஹூசைனி அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து கராத்தே பயிற்சி கொடுப்பதில் முழு நேரத்தையும செலவிட்டார்.
இந்த நிலையில, தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். முதலில் தன்னை வில்லனை தவிர வேறு எந்த வேடத்துக்கும் அழைக்க மாட்டார்கள் என்று நினைத்த ஹூசைனி, வில்லன் வேடத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என்றாராம்.
அதையடுத்து, அவரது ரோல் பற்றி கெளதம்மேனன் சொன்னதும், கண்டிப்பாக நடிக்கிறேன் என்று டபுள் ஓ.கே சொல்லி விட்டாராம் ஹூசைனி.
ஆக, இந்த படத்தில் கராத்தே ஹூசைனியை விரும்பி நடிக்க வைத்திருப்பதால், இதில் அஜீத் கராத்தேயை மையப்படுத்தும் சண்டை காட்சியிலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
அதோடு சில ஆண்டுகளுக்கு முன்பு சில படங்களில் ஹூசைனி நடித்து வந்ததால், பெரிய அளவில் அவர் பிரபலமடைந்தார்.
இருப்பினும், அவரை முழுநேர வில்லனாக்க சில டைரக்டர்கள் திட்டமிட்டதால் தன் பெயரளவில் நெகடீவ் இமேஜ் உருவாக்க விரும்பாத கராத்தே ஹூசைனி அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து கராத்தே பயிற்சி கொடுப்பதில் முழு நேரத்தையும செலவிட்டார்.
இந்த நிலையில, தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். முதலில் தன்னை வில்லனை தவிர வேறு எந்த வேடத்துக்கும் அழைக்க மாட்டார்கள் என்று நினைத்த ஹூசைனி, வில்லன் வேடத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என்றாராம்.
அதையடுத்து, அவரது ரோல் பற்றி கெளதம்மேனன் சொன்னதும், கண்டிப்பாக நடிக்கிறேன் என்று டபுள் ஓ.கே சொல்லி விட்டாராம் ஹூசைனி.
ஆக, இந்த படத்தில் கராத்தே ஹூசைனியை விரும்பி நடிக்க வைத்திருப்பதால், இதில் அஜீத் கராத்தேயை மையப்படுத்தும் சண்டை காட்சியிலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
Labels:
ajith,
Gautam Menon,
thala,
thala55,
கராத்தே ஹூசைனி
அஜித் - கவுதம் மேனன் இணையும் படத்தின் புதிய செய்தி
கோடம்பாக்கத்தில் அனைவரும் கிசு கிசுத்துக் கொண்டிருப்பது தல55 பற்றி தான். தினம் தினம் இப்படத்தின் செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. தற்போது படம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன . பொதுவா கவுதம் மேனன் படம் என்றால் அதில் ஒளிப்பதிவாளருக்கு அதிக வேலை இருக்கும். இது அவருடை முதல் படத்திலிருந்து தற்போது வெளிவந்த அவரது கடைசி படம் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அஜித் - கவுதம் மேனன் இணையும் புதிய படத்திற்கு இன்னும் ஒளிப்பதிவாளரை நியமிக்கவில்லையாம். இந்த விஷயத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறாராம். கவுதமின் சாய்ஸ் இரண்டு பேரின் மீது இருக்கிறது. அதாவது தற்போது சிம்புவை வைத்து கவுதம் மேனன் இயக்கிக் கொண்டிருக்கும் புதிய படத்தை ஒளிப்பதிவு செய்துக் கொண்டிருக்கும் டேன் மேக்ஆர்தூர் மற்றும் எஸ்.ஆர்.கதிர் இவர் கற்றது தமிழ் மற்றும் சுப்ரமணியபுரம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர்களில் இருவரில் யாரை தேர்வு செய்வதில் என்பதில் தான் இவ்வளவு குழப்பம்.
இப்படத்தில் அஜித்திற்கு இரண்டு வில்லன்களாம். அஜித்திற்கு இணையான வில்லன்கள் என்பதால் அதை பெரிய மாஸ் மற்றும் இதுவரை தல ரசிகர்கள் இப்படி ஒரு அஜித் படத்தை பார்த்திருக்க கூடாது என்பதில் குறிக்கோளாக இருக்கிறாராம். அது ஒளிப்பதிவால் மட்டுமே முடியும் என்பதால் தான் இந்த தாமதம்
Monday 17 March 2014
அஜீத் படம் மூலம் மீண்டும் இணையும் கவுதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ்
அஜீத் நடிக்கும் புதிய படத்தில் கவுதம் மேனனுடன் மீண்டும் இணைகிறார் ஹாரிஸ் ஜெயரராஜ். ஆரம்பம் படத்துக்குப் பிறகு ஏ எம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். இந்தப் படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். கவுதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலேயிலிருந்து வாரணம் ஆயிரம் வரை இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். ஏ ஆர் ரஹ்மான், இளையராஜா ஆகியோருடனும் பணியாற்றினார் கவுதம் மேனன். இப்போது அஜீத் படத்துக்காக மீண்டும் ஹாரீஸ் ஜெயராஜுடன் கை கோர்த்துள்ளார். அஜீத் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பது இதுவே முதல் முறை
source: tamil.oneindia
இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். கவுதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலேயிலிருந்து வாரணம் ஆயிரம் வரை இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். ஏ ஆர் ரஹ்மான், இளையராஜா ஆகியோருடனும் பணியாற்றினார் கவுதம் மேனன். இப்போது அஜீத் படத்துக்காக மீண்டும் ஹாரீஸ் ஜெயராஜுடன் கை கோர்த்துள்ளார். அஜீத் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பது இதுவே முதல் முறை
source: tamil.oneindia
இரட்டை வேடங்களில் அஜித்?
கௌதம் மேனன் இயக்கும் அஜித் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகிறது. அஜித் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். இதற்காக எட்டு கிலோ எடையைக் குறைத்து கொஞ்சம் ஸ்லிம் ஆகி இருக்கிறார்.
சிக்ஸ் பேக் போல எய்ட் பேக்கில் அசத்தப் போகிறார் அஜித். ஏற்கனவே 'ஆஞ்சநேயா', 'கிரீடம்' படங்களில் அஜித் போலீஸாக நடித்திருக்கிறார்.
ஆனால், அந்தப் படங்களில் இல்லாத ஸ்டைல், லுக், கம்பீரம் கௌதம் மேனன் படத்தில் இருக்குமாம்.
அஜித் இதில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கப் போகிறாராம். 'வாலி', 'வில்லன்', 'அட்டகாசம்', 'அசல்' போன்ற படங்களில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக படத்தை முடிக்க வேண்டும் என்று கௌதம் மேனன் தீவிரமாக இயங்க ஆரம்பித்துவிட்டார்.
Saturday 15 March 2014
அஜித்தை இயக்கப் போகும் ஏ.ஆர்.முருகதாஸ்?
'தீனா' படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இயக்குநர் அடையாளம் கொடுத்தவர் அஜித். இப்போது அஜித்தின் அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கைகோர்க்கப்போகிறாராம்.
முருகதாஸ் தற்போது விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும், 'துப்பாக்கி'யின் இந்தி ரீமேக்கான 'ஹாலிடே' படத்தை ரிலீஸ் செய்வதிலும் மும்மரமாக இருக்கிறார்.
இதே நேரத்தில் முருகதாஸ் தெலுங்குப் படம் இயக்கப்போவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது அடுத்தபடம் அஜித்துடன் தான் என தெளிவாகக் கூறிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.
படத்தின் பெயர் 'தல' எனக் கூறப்படுகிறது. அஜித்திற்கு 'தீனா' படத்தில் தல என்ற பட்டப்பெயர் வைத்தது ஏ.ஆர்.முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித் அதனை முடித்துவிட்டு 'தல' படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. source: cinema.vikatan
Labels:
ajith,
AR Murugadoss,
tamilcinema,
thala
Friday 14 March 2014
அஜீத்தா, விஜய்யான்னா அஜீத் தான்: ஜனனி அய்யர்
அஜீத் அல்லது விஜய் படத்தில் நடிக்க கேட்டால் தான் நிச்சயம் அஜீத்துடன் தான் நடிப்பேன் என்று ஜனனி அய்யர் தெரிவித்துள்ளார். அவன் இவன், பாகன், தெகிடிஆகிய படங்களில் நடித்த ஜனனி அய்யர் தற்போது மலையாளத்தில் பிசியான நடிகை. அவர் கையில் 4 மலையாள படங்கள் உள்ளன. வாய்ப்பு வருவதால் அங்கு நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனனிக்கு கோலிவுட்டில் உலக நாயகன் கமல் ஹாஸன் தான் மிகவும் பிடிக்குமாம். அவரை அடுத்து ஜனனிக்கு அஜீத் குமாரை தான் பிடிக்குமாம்.
அஜீத், விஜய் அஜீத் மற்றும் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிப்பீர்கள் என்று ஜனனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், அவர்கள் இருவருடன் நடிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்காது. 2 பேருடனும் நடிக்க விரும்புகிறேன். ஆனால் நான் அஜீத் ரசிகை என்பதால் அவருடன் நடிக்கும் வாய்ப்பையே ஏற்றுக் கொள்வேன் என்றார்.
ஜனனிக்கு கோலிவுட்டில் உலக நாயகன் கமல் ஹாஸன் தான் மிகவும் பிடிக்குமாம். அவரை அடுத்து ஜனனிக்கு அஜீத் குமாரை தான் பிடிக்குமாம்.
அஜீத், விஜய் அஜீத் மற்றும் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிப்பீர்கள் என்று ஜனனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், அவர்கள் இருவருடன் நடிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்காது. 2 பேருடனும் நடிக்க விரும்புகிறேன். ஆனால் நான் அஜீத் ரசிகை என்பதால் அவருடன் நடிக்கும் வாய்ப்பையே ஏற்றுக் கொள்வேன் என்றார்.
Saturday 8 March 2014
அஜீத்- கவுதம் மேனன் படத்தின் வசனகர்த்தா!
பாலிவுட்டில் சில இந்திப் படங்கள் இயக்கியுள்ள ஸ்ரீதர் ராகவன்தான் அஜீத்தின் அடுத்த படத்துக்கு வசனம் எழுதப் போகிறார். தம் மரோ தம்ஸ காக்கி போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர் ஸ்ரீதர் ராகவன். சென்னைக்காரர்தான். இந்தியில் சமீபத்தில் வந்த ஏஜென்ட் வினோத் உள்பட சில படங்களையும் இயக்கியுள்ளார். அஜீத் - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் வசனகர்த்தாவாக ஸ்ரீதரைத்தான் நியமித்துள்ளனர். இதனை உறுதி செய்த ஸ்ரீதர் ராகவன், "கவுதம் மேனன் இயக்கும் அஜீத் படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதுப் பணி மிக சுவாரஸ்யமாக உள்ளது. மிக அற்புதமான கூட்டணியில் இணைந்திருக்கிறேன்," என்று ட்விட் செய்துள்ளார். இந்தப் படம் ஒரு போலீஸ் கதை. ஏற்கெனவே இதுமாதிரி படங்களுக்கு எழுதிய அனுபவம் உள்ளவர் என்பதாலேயே ஸ்ரீதர் ராகவனை அழைத்தாராம் கவுதம் மேனன்.
Labels:
#thala,
ajith,
Gautam Menon,
thala55
Wednesday 5 March 2014
சிவா இயக்கத்தில் ரொமண்டிக ஹீரோ களமிறங்கிறார் அஜித்
அஜீத்- சிறுத்தை சிவா கூட்டணியில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியான 'வீரம்' படம் 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை அடுத்து அஜீத் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் அஜீத்தை நேரில் சந்தித்து வீரம் பட வெற்றிக்கான வாழ்த்துக்களை பரிமாறிகொண்டபோது, தனது அடுத்த படத்தின் திரைக்கதையை அஜீத்திடம் காண்பித்திருக்கிறார் சிறுத்தை சிவா. ஆக்ஷன் காட்சிகள் சிறிதும் இல்லாமல் ஜாலியான ஒரு ரொமண்டிக ஹீரோ பாத்திரம் அஜீத்தை மிகவும் கவர்ந்தது. எனவே இந்த படத்தில் நானே நடிக்கிறேன் என்று அஜீத் சம்மதம் தெரிவித்துவிட்டார்.
அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை அடுத்து அஜீத் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் அஜீத்தை நேரில் சந்தித்து வீரம் பட வெற்றிக்கான வாழ்த்துக்களை பரிமாறிகொண்டபோது, தனது அடுத்த படத்தின் திரைக்கதையை அஜீத்திடம் காண்பித்திருக்கிறார் சிறுத்தை சிவா. ஆக்ஷன் காட்சிகள் சிறிதும் இல்லாமல் ஜாலியான ஒரு ரொமண்டிக ஹீரோ பாத்திரம் அஜீத்தை மிகவும் கவர்ந்தது. எனவே இந்த படத்தில் நானே நடிக்கிறேன் என்று அஜீத் சம்மதம் தெரிவித்துவிட்டார்.
கதைப்படி ஹீரோ ரொமாண்டிக் வாலிபர் என்பதால் அஜீத்தின் எடையை குறைக்க வேண்டும், ஏற்கனவே கவுதம் மேனன் படத்திற்காக குறைத்த எடையை மெயிண்டன் செய்தாலே போதும் என்றும் சிறுத்தை சிவா கேட்டுக்கொண்டார். அஜீத்தும் சம்மதம் தெரிவித்துவிட்டார் (இந்த படத்தை பூஜை வரும் டிச.10ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது ?)
Monday 3 March 2014
போலீஸ் அதிகாரியாக களமிறங்கிறார் அஜித்
அஜித் - கெளதம் மேனன் இணையும் படத்திற்கான ஆரம்பகட்ட வேலை கள் நடந்துவரும் நிலையில் அப்படத் தைப் பற்றி சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
இப்படத்தில் முதன் முறையாக முழுநீள போலீஸ் அதிகாரியாக களமிறங்கிறார் அஜித். போலீஸ் அதிகாரி வேடம் என்பதால், உடம்பை மிகவும் குறைத்து 6 பேக்ஸ் வைக்க திட்டமிட்டுள்ளாராம் அஜித். யம்மாடி அதற்காக ஜிம்மிலேயே தவம் கிடக்கிறார். அதோடு சால்ட் & பெப்பர் லுக்கில் இருந்து முற்றிலும் இளமையாக நடிக்க இருக்கிறாராம்.
. கெளதம் மேனன் படத்தில் இருந்து சூர்யா விலகியதைத் தொடர்ந்து, கெளதம் மேனனை அழைத்துள்ளார் அஜித். “இந்த முறை நம்ம கூட்டணி மிஸ்ஸாக கூடாது. நாம பண்றோம், ஏ.எம்.ரத்னம் தான் தயாரிப்பாளர்” என்று கூற சந்தோஷத்தில் திளைத்தார் கெளதம் மேனன்.
முதலில் அஜித்தை சந்திக்கும் போது கூறிய, அதே போலீஸ் அதிகாரி கதையை கையில் எடுத்திருக்கிறார் கெளதம் மேனன். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசி வருகிறார். 5 மாதங்களில் முழுப் படப்பிடிப்பையும் முடித்து, தீபாவளிக்கு வெளியிட திட்ட மிட்டு இருக்கிறார்கள்.
மார்ச் 15ம் தேதிக்கு பிறகு படப்பிடிப்பைத் தொடங்கவுள்ள நிலையில் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
Labels:
ajith,
thala,
thala55,
அனுஷ்கா,
அஜித்,
ஏ.எம்.ரத்னம்,
கெளதம் மேனன்
Friday 28 February 2014
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் சில செய்திகள்
١ கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பூஜை வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி மிக எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ١ அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. ١ இந்த படத்தை வரும் தீபாவளி தினத்தன்று ரிலீஸ்
١ தல அஜீத் போலீஸ் என்று கூறப்படுகிறது ١ சமீப காலமாக வந்த படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்த்ல் இருந்த அஜீத்தை கவுதம் மேனன் முற்றிலும் மாற்றுவதற்கு தயாராகிவிட்டார். ١ அஜீத்தின் கேரக்டர் இளமையானது என்பதால் மேக்கப்பின் உதவி மட்டுமின்றி உண்மையிலேயே அஜீத்தை இளமையாக மாற்ற கவுதம் மேனன் முடிவு செய்திருக்கிறார் ١ இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த நடிகை அறிமுகமாகிறார் ١ இந்தப் படத்தில் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார் ١ மங்காத்தா படத்தில் முக்கிய கேரக்டரில் அர்ஜூன் நடித்தது போன்று இந்த படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல நடிகரை நடிக்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது ١ படத்தில் ஸ்லிம்மாக இருக்க வேண்டுமாம். அதற்காக அவர் ஜிம்முக்கு சென்று கொண்டிருக்கிறார்.
Labels:
aijth,
Gautam Menon,
thala,
thala55
Thala Ajith as a young and dynamic cop
The upcoming Ajith - Gautham Menon project, which comes on the back of successive hits for Ajith, in Arrambam and Veeram, is slowly gearing up for its start. We have investigated some exciting details from trusted sources, about this A.M.Rathnam production and here they are.
The film is likely to start its shoots with a simple 'pooja' ceremony and between March 15 and 17, 'Thala 55' is expected to get off the starting blocks. The film's shoots are planned to be wrapped up before the end of July, and the team is eyeing a Diwali 2014 release.
Now coming to Ajith's role in the film, he is touted to be playing a young and dynamic cop in the film. Thala is currently working on his fitness and he is also expected to bid goodbye to the 'salt and pepper' hair which we saw in his recent films. On the whole, fans can expect a different Ajith in this film. And the long pending surgery that Ajith is expected to undergo, won't be happening until he completes this film
A.R.Rahman is in talks to compose for the film and the final deal is expected to be signed soon. The lead actress is also yet to be firmed up with Anushka leading the race to bag the role. We also hear that the script has scope for another leading actor to share the screen space with Ajith, on the lines of how Arjun did in Mankatha. The actor who will be doing this pivotal role is yet to be decided.
We again reiterate that all this information is obtained through investigation with our trusted sources. An official word from the people concerned with this much hyped project is awaited.
Labels:
#thala,
ajith,
Gautam Menon,
thala
Subscribe to:
Posts (Atom)